முகப்பு |
இல்லோன் இன்பம் |
120. குறிஞ்சி |
இல்லோன் இன்பம் காமுற்றாஅங்கு, |
||
அரிது வேட்டனையால்-நெஞ்சே!-காதலி |
||
நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு |
||
அரியள் ஆகுதல் அறியாதோயே. |
உரை | |
அல்ல குறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிந்தவழிக் கலங்கியதூஉம் ஆம். - பரணர் |