முகப்பு |
இவன் இவள் ஐம்பால் |
229. பாலை |
இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன் |
||
புன் தலை ஓரி வாங்குநள் பரியவும், |
||
காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது, |
||
ஏதில் சிறு செரு உறுபமன்னோ! |
||
நல்லை மன்றம்ம பாலே-மெல் இயல் |
||
துணை மலர்ப் பிணையல் அன்ன இவர் |
||
மணம் மகிழ் இயற்கை காட்டியோயே. |
உரை | |
இடைச் சுரத்துக் கண்டார் தம்முள்ளே சொல்லியது. - மோதாசனார் |