முகப்பு |
உரைத்திசின் தோழி |
302. குறிஞ்சி |
உரைத்திசின்-தோழி!-அது புரைத்தோ அன்றே? |
||
அருந் துயர் உழத்தலும் ஆற்றாம்; அதன்தலைப் |
||
பெரும்பிறிதாகல் அதனினும் அஞ்சுதும்; |
||
அன்னோ! இன்னும், நல் மலை நாடன், |
||
'பிரியா நண்பினர் இருவரும்' என்னும் |
||
அலர்-அதற்கு அஞ்சினன்கொல்லோ? பலர் உடன் |
||
துஞ்சு ஊர் யாமத்தானும், என் |
||
நெஞ்சத்து அல்லது வரவு அறியானே. |
உரை | |
வரைவிடைக் கவன்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது. - மாங்குடி கிழார் |