முகப்பு |
உள்ளார் கொல்லோ...கிள்ளை |
67. பாலை |
உள்ளார்கொல்லோ-தோழி!-கிள்ளை |
||
வளை வாய்க் கொண்ட வேப்ப ஒண் பழம் |
||
புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்ப் |
||
பொலங் கல ஒரு காசு ஏய்க்கும் |
||
நிலம் கரி கள்ளிஅம் காடு இறந்தோரே? |
உரை | |
பிரிவிடை ஆற்றாத தலைமகள் தோழிக்கு உரைத்தது. - அள்ளூர் நன்முல்லை |