முகப்பு |
ஊஉர் அலர் எழச் |
262. பாலை |
ஊஉர் அலர் எழ, சேரி கல்லென, |
||
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை |
||
தானே இருக்க, தன் மனை; யானே, |
||
நெல்லி தின்ற முள் எயிறு தயங்க |
||
உணல் ஆய்ந்திசினால், அவரொடு-சேய் நாட்டு, |
||
விண் தொட நிவந்த விலங்கு மலைக் கவாஅன், |
||
கரும்பு நடு பாத்தி அன்ன, |
||
பெருங் களிற்று அடிவழி நிலைஇய நீரே. |
உரை | |
உடன்போக்கு நேர்ந்த தோழி கிழத்திக்கு உடன்போக்கு உணர்த்தியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ |