முகப்பு |
எம் அணங்கினவே |
53. மருதம் |
எம் அணங்கினவே-மகிழ்ந! முன்றில் |
||
நனை முதிர் புன்கின் பூத் தாழ் வெண் மணல், |
||
வேலன் புனைந்த வெறி அயர் களம்தொறும் |
||
செந் நெல் வான் பொரி சிதறி அன்ன, |
||
எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை, |
||
நேர் இறை முன்கை பற்றி, |
||
சூரரமகளிரோடு உற்ற சூளே. |
உரை | |
வரைவு நீட்டித்தவழித் தோழி தலைமகற்கு உரைத்தது. - கோப்பெருஞ்சோழன் |