முகப்பு |
ஒலி வெள் அருவி |
88. குறிஞ்சி |
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன், |
||
சிறு கட் பெருங் களிறு வயப் புலி தாக்கித் |
||
தொல் முரண் சொல்லும் துன் அருஞ் சாரல், |
||
நடு நாள் வருதலும் வரூஉம்; |
||
வடு நாணலமே-தோழி!-நாமே. |
உரை | |
இரவுக்குறி நேர்ந்த வாய்ப்பாட்டால் தோழி தலைமகட்குச் சொல்லியது. -மதுரைக் கதக்கண்ணன் |