முகப்பு |
வந்த வாடைச் சில் |
332. குறிஞ்சி |
வந்த வாடைச் சில் பெயற் கடைநாள், |
||
நோய் நீந்து அரும் படர் தீர நீ நயந்து |
||
கூறின் எவனோ-தோழி!-நாறு உயிர் |
||
மடப் பிடி தழீஇத் தடக் கை யானை |
||
குன்றகச் சிறுகுடி இழிதரும் |
||
மன்றம் நண்ணிய மலைகிழவோற்கே? | உரை | |
வரையாது வந்தொழுகாநின்ற காலத்து, கிழவன் கேட்பக் கிழத்திக்குத் தோழி கூறியது.- மதுரை மருதங்கிழார் மகன் இளம் போத்தன் |