முகப்பு |
வளை உடைத்தனையது |
307. பாலை |
வளை உடைத்தனையது ஆகி, பலர் தொழ, |
||
செவ் வாய் வானத்து ஐயெனத் தோன்றி, |
||
இன்னாப் பிறந்தன்று, பிறையே; அன்னோ, |
||
மறந்தனர்கொல்லோ தாமே-களிறு தன் |
||
உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது, |
||
நிலை உயர் யாஅம் தொலையக் குத்தி, |
||
வெண் நார் கொண்டு, கை சுவைத்து, அண்ணாந்து, |
||
அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும் |
||
அத்த நீள் இடை அழப் பிரிந்தோரே? | உரை | |
பிரிவிடைக் கடுஞ்சொற் சொல்லிய தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கடம்பனூர்ச் சாண்டிலியன் |