முகப்பு |
கடல் பாடுஅவிந்து |
177. நெய்தல் |
கடல் பாடு அவிந்து, கானல் மயங்கி, |
||
துறை நீர் இருங் கழி புல்லென்றன்றே; |
||
மன்றலம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை |
||
அன்றிலும் பையென நரலும்; இன்று அவர் |
||
வருவர்கொல் வாழி-தோழி!-நாம் நகப் |
||
புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சித் |
||
தணப்பு அருங் காமம் தண்டியோரே? |
உரை | |
கிழவன் வரவுணர்ந்து, தோழி கிழத்திக்கு உரைத்தது. - உலோச்சன் |