முகப்பு |
வெறி என உணர்ந்த |
360. குறிஞ்சி |
வெறி என உணர்ந்த வேலன் நோய் மருந்து |
||
அறியான் ஆகுதல் அன்னை காணிய, |
||
அரும் படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும், |
||
வாரற்கதில்ல-தோழி!-சாரல் |
||
பிடிக் கை அன்ன பெருங் குரல் ஏனல் |
||
உண் கிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே |
||
சிலம்பின் சிலம்பும் சோலை |
||
இலங்கு மலை நாடன் இரவினானே. | உரை | |
தலைமகன் சிறைப்புறத்தானாக, வெறி அஞ்சிய தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைவி சொல்லியது - மதுரை ஈழத்துப் பூதன் தேவன் |