முகப்பு |
வேரல் வேலி வேர்க்கோள் |
18. குறிஞ்சி |
வேரல் வேலி வேர் கோட் பலவின் |
||
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி! |
||
யார் அஃது அறிந்திசினோரே?-சாரல் |
||
சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள் |
||
உயிர் தவச் சிறிது; காமமோ பெரிதே! | உரை | |
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு, வரைவு கடாயது.-கபிலர் |