முகப்பு |
கலி மழை கெழீஇய |
264.குறிஞ்சி |
கலி மழை கெழீஇய கான் யாற்று இகுகரை, |
||
ஒலி நெடும் பீலி துயல்வர இயலி, |
||
ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு |
||
நயந்தனன் கொண்ட கேண்மை |
||
பயந்தகாலும், பயப்பு ஒல்லாதே. |
உரை | |
'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்கு, தலைமகள், 'ஆற்றுவல்' என்றது. - கபிலர் |