முகப்பு |
காந்தள் அம் கொழுமுகை |
265. குறிஞ்சி |
காந்தள்அம் கொழு முகை, காவல்செல்லாது, |
||
வண்டு வாய் திறக்கும் பொழுதில், பண்டும் |
||
தாம் அறி செம்மைச் சான்றோர்க் கண்ட |
||
கடன் அறி மாக்கள் போல, இடன் விட்டு, |
||
இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன் |
||
நன்னர் நெஞ்சத்தன்-தோழி!-நின் நிலை |
||
யான் தனக்கு உரைத்தனென் ஆக, |
||
தான் நாணினன், இஃது ஆகாவாறே. |
உரை | |
வரையாது பிரிந்த இடத்து, 'அவர் பிரிந்த காரணம் நின்னை வரைந்து கோடல் காரணமாகத் தான்' எனத் தோழி தலைமகட்குக் கூறியது. - கருவூர்க் கதப்பிள்ளை |