முகப்பு |
குணகடல் - திரையது |
128. நெய்தல் |
குண கடல் திரையது பறை தபு நாரை |
||
திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை |
||
அயிரை ஆர் இரைக்கு அணவந்தாஅங்குச் |
||
சேயள் அரியோட் படர்தி; |
||
நோயை-நெஞ்சே!-நோய்ப் பாலோயே. |
உரை | |
அல்ல குறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது; உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் கூறியதூஉம் ஆம். - பரணர் |