முகப்பு |
குறுந்தாள் கூதளி |
60. குறிஞ்சி |
குறுந் தாட் கூதளி ஆடிய நெடு வரைப் |
||
பெருந்தேன் கண்ட இருந்ங் கால் முடவன், |
||
உட்கைச் சிறு குடை கோலி, கீழ் இருந்து, |
||
சுட்டுபு நக்கியாங்கு, காதலர் |
||
நல்கார் நயவார் ஆயினும், |
||
பல் கால் காண்டலும், உள்ளத்துக்கு இனிதே. |
உரை | |
பிரிவிடை ஆற்றாமையான் தலைமகள் தோழிக்கு உரைத்தது. - பரணர் |