முகப்பு |
கைவினை மாக்கள் |
309. மருதம் |
கைவினை மாக்கள் தம் செய் வினை முடிமார், |
||
சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட, |
||
நீடிய வரம்பின் வாடிய விடினும், |
||
'கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம்' என்னாது' |
||
பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும் |
||
நின் ஊர் நெய்தல் அனையேம்-பெரும!- |
||
நீ எமக்கு இன்னாதன பல செய்யினும், |
||
நின் இன்று அமைதல் வல்லாமாறே. |
உரை | |
பரத்தையிற் பிரிந்து வந்த கிழவற்குத் தோழி வாயில் நேர்ந்தது.- உறையூர்ச் சல்லியன் குமாரன் |