முகப்பு |
சுனைப் பூக்குற்றுத் |
142. குறிஞ்சி |
சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇ, |
||
புனக் கிளி கடியும் பூங் கட் பேதை |
||
தான் அறிந்தன்றோ இலளே-பானாள் |
||
பள்ளி யானையின் உயிர்த்து, என் |
||
உள்ளம், பின்னும், தன் உழையதுவே! |
உரை | |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் சொல்லியது; தோழிக்குத் தலைமகன் தன் குறை கூறியதூஉம் ஆம் - கபிலர் |