முகப்பு |
செவ்வரைச் சேக்கை |
187. குறிஞ்சி |
செவ் வரைச் சேக்கை வருடைமான் மறி |
||
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி, |
||
பெரு வரை நீழல் உகளும் நாடன் |
||
கல்லினும் வலியன்-தோழி!- |
||
வலியன் என்னாது மெலியும், என் நெஞ்சே. |
உரை | |
வரைவு நீட்டித்த வழி, ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்க வேண்டித் தலைமகனை இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது. - கபிலர் |