முகப்பு |
தச்சன் செய்த சிறுமா வையம் |
61. மருதம் |
தச்சன் செய்த சிறு மா வையம், |
||
ஊர்ந்து இன்புறாஅர்ஆயினும், கையின் |
||
ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல, |
||
உற்று இன்புறேஎம்ஆயினும், நற்றோர்ப் |
||
பொய்கை ஊரன் கேண்மை |
||
செய்து இன்புற்றனெம்; செறிந்தன வளையே. | உரை | |
தோழி தலைமகன் வாயில்கட்கு உரைத்தது. - தும்பிசேர்கீரன் |