தச்சன் செய்த சிறுமா வையம்

61. மருதம்
தச்சன் செய்த சிறு மா வையம்,
ஊர்ந்து இன்புறாஅர்ஆயினும், கையின்
ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல,
உற்று இன்புறேஎம்ஆயினும், நற்றோர்ப்
பொய்கை ஊரன் கேண்மை
செய்து இன்புற்றனெம்; செறிந்தன வளையே.

உரை

தோழி தலைமகன் வாயில்கட்கு உரைத்தது. - தும்பிசேர்கீரன்