முகப்பு |
தலைப் புணைக் கொளினே |
222. குறிஞ்சி |
தலைப் புணைக் கொளினே, தலைப் புணைக் கொள்ளும்; |
||
கடைப் புணைக் கொளினே, கடைப் புணைக் கொள்ளும்; |
||
புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின், |
||
ஆண்டும் வருகுவள் போலும்-மாண்ட |
||
மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகைச் |
||
செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண் |
||
துளி தலைத் தலைஇய தளிர் அன்னோளே. | உரை | |
பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்தது. - சிறைக்குடி ஆந்தையார் |