முகப்பு |
தாதின் செய்த தண்பனிப் |
48. பாலை |
'தாதின் செய்த தண் பனிப் பாவை |
||
காலை வருந்தும் கையாறு ஓம்பு' என, |
||
ஓரை ஆயம் கூறக் கேட்டும், |
||
இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும் |
||
நன்னுதல் பசலை நீங்க, அன்ன |
||
நசை ஆகு பண்பின் ஒரு சொல் |
||
இசையாதுகொல்லோ, காதலர் தமக்கே? | உரை | |
பகற்குறிக்கண் காணும் பொழுதினும் காணப்பொழுது பெரிதாகலின், வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு, தோழி சொல்லியது. - பூங்கணுத்திரையார் |