முகப்பு |
தாமே செல்ப ஆயின் |
348. பாலை |
தாமே செல்பஆயின், கானத்துப் |
||
புலம் தேர் யானைக் கோட்டிடை ஒழிந்த |
||
சிறு வீ முல்லைக் கொம்பின் தாஅய், |
||
இதழ் அழிந்து ஊறும் கண்பனி, மதர் எழில் |
||
பூண் அக வன் முலை நனைத்தலும் |
||
காணார்கொல்லோ-மாணிழை!-நமரே? | உரை | |
செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட கிழத்தியைத் தோழி வற்புறீஇயது. - மாவளத்தன் |