பணைத்தோட்குறுமகள்

276. குறிஞ்சி
பணைத் தோட் குறுமகள்
பாவை தையும்,
பஞ்சாய்ப் பள்ளம் சூழ்ந்தும், மற்று-இவள்
உருத்து எழு வன முலை ஒளி பெற எழுதிய
தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்,
முறையுடை அரசன் செங்கோல் அவையத்து
யான் தற் கடவின் யாங்கு ஆவதுகொல்?
பெரிதும் பேதை மன்ற-
அளிதோதானே-இவ் அழுங்கல் ஊரே!

உரை

தோழிக்குக் குறைமறாமல் தலைமகன் கூறியது. - கூழிக் கொற்றன்