முகப்பு |
பணைத்தோட்குறுமகள் |
276. குறிஞ்சி |
பணைத் தோட் குறுமகள் |
||
பாவை தையும், |
||
பஞ்சாய்ப் பள்ளம் சூழ்ந்தும், மற்று-இவள் |
||
உருத்து எழு வன முலை ஒளி பெற எழுதிய |
||
தொய்யில் காப்போர் அறிதலும் அறியார், |
||
முறையுடை அரசன் செங்கோல் அவையத்து |
||
யான் தற் கடவின் யாங்கு ஆவதுகொல்? |
||
பெரிதும் பேதை மன்ற- |
||
அளிதோதானே-இவ் அழுங்கல் ஊரே! | உரை | |
தோழிக்குக் குறைமறாமல் தலைமகன் கூறியது. - கூழிக் கொற்றன் |