முகப்பு |
பருவத்தேன் நசைஇப் |
175. நெய்தல் |
பருவத் தேன் நசைஇப் பல் பறைத் தொழுதி, |
||
உரவுத் திரை பொருத திணிமணல் அடைகரை, |
||
நனைந்த புன்னை மாச் சினை தொகூஉம் |
||
மலர்ந்த பூவின் மா நீர்ச் சேர்ப்பற்கு |
||
இரங்கேன்-தோழி!-'ஈங்கு என் கொல்?' என்று, |
||
பிறர்பிறர் அறியக் கூறல் |
||
அமைந்தாங்கு அமைக; அம்பல் அஃது எவனே? | உரை | |
பிரிவிடைக் கடுஞ் சொற் சொல்லி வற்புறுத்துவாட்குக் கிழத்தி உரைத்தது. - உலோச்சன். |