முகப்பு |
புரிமட மரையான் |
317. குறிஞ்சி |
புரி மட மரையான் கரு நரை நல் ஏறு |
||
தீம் புளி நெல்லி மாந்தி, அயலது |
||
தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து உயிர்த்து, |
||
ஓங்கு மலைப் பைஞ் சுனை பருகும் நாடன் |
||
நம்மை விட்டு அமையுமோ மற்றே-கைம்மிக |
||
வட புல வாடைக்கு அழி மழை |
||
தென் புலம் படரும் தண் பனி நாளே? | உரை | |
பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. - மதுரைக் கண்டரதத்தன் |