முகப்பு |
பூ இடைப்படினும் |
57. நெய்தல் |
பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன |
||
நீர் உறை மகன்றிற் புணர்ச்சி போலப் |
||
பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு, |
||
உடன் உயிர் போகுகதில்ல - கடன் அறிந்து, |
||
இருவேம் ஆகிய உலகத்து, |
||
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே. | உரை | |
காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- சிறைக்குடி ஆந்தையார் |