முகப்பு |
பெயல் கால் மறைத்தலின் |
355. குறிஞ்சி |
பெயல் கால் மறைத்தலின், விசும்பு காணலரே; |
||
நீர் பரந்து ஒழுகலின், நிலம் காணலரே; |
||
எல்லை சேறலின், இருள் பெரிது பட்டன்று; |
||
பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல் |
||
யாங்கு வந்தனையோ?-ஓங்கல் வெற்ப!- |
||
வேங்கை கமழும் எம் சிறுகுடி |
||
யாங்கு அறிந்தனையோ? நோகோ யானே. | உரை | |
இரவுக்குறி நேர்ந்த தலைமகற்குத் தோழி நொந்து கூறியது. - கபிலர் |