முகப்பு |
பெறுவது இயையாது ஆயினும் |
199. குறிஞ்சி |
பெறுவது இயையாதுஆயினும், உறுவது ஒன்று |
||
உண்டுமன் வாழிய-நெஞ்சே!-திண் தேர்க் |
||
கை வள் ஓரி கானம் தீண்டி |
||
எறிவளி கமழும் நெறிபடு கூந்தல் |
||
மை ஈர் ஓதி மாஅயோள்வயின், |
||
இன்றை அன்ன நட்பின் இந் நோய் |
||
இறு முறை என ஒன்று இன்றி, |
||
மறுமை உலகத்து மன்னுதல் பெறினே. | உரை | |
தோழி செறிப்பு அறிவுறுப்ப, நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது. - பரணர் |