முகப்பு |
பொழுதும் எல்லின்று |
161. குறிஞ்சி |
பொழுதும் எல்லின்று; பெயலும் ஓவாது, |
||
கழுது கண் பனிப்ப வீசும்; அதன்தலைப் |
||
புலிப்பல் தாலிப் புதல்வன் புல்லி, |
||
'அன்னா!' என்னும், அன்னையும்: அன்னோ! |
||
என் மலைந்தனன்கொல் தானே-தன் மலை |
||
ஆரம் நாறும் மார்பினன் |
||
மாரி யானையின் வந்து நின்றனனே? | உரை | |
இரவுக்குறிக்கண் வந்த தலைமகனைக் காப்புமிகுதியான் எதிர்ப்படப் பெறாத தலைமகள், பிற்றைஞான்று தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - நக்கீரர் |