முதைப் புனம் கொன்ற

155. முல்லை
முதைப் புனம் கொன்ற ஆர்கலி உழவர்
விதைக் குறு வட்டி போதொடு பொதுளப்
பொழுதோ தான் வந்தன்றே; 'மெழுகு ஆன்று
ஊது உலைப் பெய்த பகுவாய்த் தெண் மணி
மரம் பயில் இறும்பின் ஆர்ப்ப, சுரன் இழிபு,
மாலை நனி விருந்து அயர்மார்
தேர் வரும்' என்னும் உரை வாராதே.

உரை

தலைமகள் பருவம் கண்டு அழிந்து சொல்லியது. - உரோடகத்துக் கந்தரத்தன்