முகப்பு |
முதைப் புனம் கொன்ற |
155. முல்லை |
முதைப் புனம் கொன்ற ஆர்கலி உழவர் |
||
விதைக் குறு வட்டி போதொடு பொதுளப் |
||
பொழுதோ தான் வந்தன்றே; 'மெழுகு ஆன்று |
||
ஊது உலைப் பெய்த பகுவாய்த் தெண் மணி |
||
மரம் பயில் இறும்பின் ஆர்ப்ப, சுரன் இழிபு, |
||
மாலை நனி விருந்து அயர்மார் |
||
தேர் வரும்' என்னும் உரை வாராதே. | உரை | |
தலைமகள் பருவம் கண்டு அழிந்து சொல்லியது. - உரோடகத்துக் கந்தரத்தன் |