முகப்பு |
நொச்சி |
138. குறிஞ்சி |
கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே- |
||
எம் இல் அயலது ஏழில் உம்பர், |
||
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி |
||
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த |
||
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே. |
உரை | |
குறி பிழைத்த தலைமகன் பிற்றை ஞான்று இரவுக்குறி வந்துழி, தோழி சிறைப்புறமாகக் கூறியது; இரவுக்குறி நேர்ந்ததூஉம் ஆம். - கொல்லன் அழிசி |