முகப்பு |
புளி |
287. முல்லை |
அம்ம வாழி-தோழி-காதலர் |
||
இன்னே கண்டும் துறக்குவர் கொல்லோ- |
||
முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ |
||
ஒதுங்கல் செல்லாப் பசும் புளி வேட்கைக் |
||
கடுஞ்சூல் மகளிர் போல நீர் கொண்டு, |
||
விசும்பு இவர்கல்லாது தாங்குபு புணரி, |
||
செழும் பல் குன்றம் நோக்கி, |
||
பெருங் கலி வானம் ஏர்தரும் பொழுதே? |
உரை | |
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி, 'நம்மைத் துறந்து வாரார்' என்று கவன்றாட்கு,பருவங் காட்டி, தோழி, 'வருவர்' எனச் சொல்லியது, - கச்சிப்பேட்டு நன்னாகையார். |