முகப்பு |
மா (கொக்கு) |
8. மருதம் |
கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் |
||
பழன வாளை கதூஉம் ஊரன் |
||
எம் இல் பெருமொழி கூறி, தம் இல், |
||
கையும் காலும் தூக்கத் தூக்கும் |
||
ஆடிப் பாவை போல, |
||
மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே. |
உரை | |
கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் எனக் கேட்ட காதற் பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - ஆலங்குடி வங்கனார். |
26. குறிஞ்சி |
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கை |
||
மேக்கு எழு பெருஞ் சினை இருந்த தோகை |
||
பூக் கொய் மகளிரின் தோன்றும் நாடன் |
||
தகாஅன் போலத் தான் தீது மொழியினும், |
||
தன் கண் கண்டது பொய்க்குவது அன்றே- |
||
தேக் கொக்கு அருந்தும் முள் எயிற்றுத்துவர் வாய் |
||
வரை ஆடு வன் பறழ்த் தந்தைக் |
||
கடுவனும் அறியும், அக் கொடியோனையே. |
உரை | |
நற்றாயும் செவிலித் தாயும் தலைமகளது வேறுபாடு கண்டு, 'இஃது எற்றினான்ஆயிற்று?' என்று கட்டுவிச்சியை வினவிக் கட்டுக் காண்கின்ற காலத்து,'தலைமகளது வேறுபாட்டிற்குக் காரணம் பிறிதோர் தெ |
73. குறிஞ்சி |
மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ; |
||
அழியல் வாழி-தோழி!-நன்னன் |
||
நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய |
||
ஒன்றுமொழிக் கோசர் போல, |
||
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே. |
உரை | |
பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்து, அதுவும் மறுத்தமைபடத் தலைமகட்குத் தோழி சொல்லியது - பரணர் |
164. மருதம் |
கணைக் கோட்டு வாளைக் கமஞ் சூல் மட நாகு |
||
துணர்த் தேக்கொக்கின் தீம் பழம் கதூஉம் |
||
தொன்று முதிர் வேளிர் குன்றூர்க் குணாது |
||
தண் பெரும் பௌவம் அணங்குக-தோழி!- |
||
மனையோள் மடமையின் புலக்கும் |
||
அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே! |
உரை | |
காதல்பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்தது. - மாங்குடிமருதன் |
192. பாலை |
'ஈங்கே வருவர், இனையல், அவர்' என, |
||
அழாஅற்கோ இனியே?-நோய் நொந்து உறைவி!- |
||
மின்னின் தூவி இருங் குயில், பொன்னின் |
||
உரை திகழ் கட்டளை கடுப்ப, மாச் சினை |
||
நறுந் தாது கொழுதும் பொழுதும், |
||
வறுங் குரற் கூந்தல் தைவருவேனே. |
உரை | |
பிரிவிடை வற்புறுத்த வன்புறை எதிர் அழிந்து கிழத்தி உரைத்தது.- கச்சிப்பேட்டு நன்னாகையார். |
201. குறிஞ்சி |
அமிழ்தம் உண்க-நம் அயல் இலாட்டி, |
||
பால் கலப்பன்ன தேக் கொக்கு அருந்துபு, |
||
நீல மென் சிறை வள் உகிர்ப் பறவை |
||
நெல்லிஅம் புளி மாந்தி, அயலது |
||
முள் இல் அம் பணை மூங்கிலில் தூங்கும் |
||
கழை நிவந்து ஓங்கிய சோலை |
||
மலை கெழு நாடனை வரும் என்றோளே! |
உரை | |
கடிநகர் புக்கு, 'வேறுபடாது நன்கு ஆற்றினாய்!' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. |
278. பாலை |
உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து |
||
முறி கண்டன்ன மெல்லென் சீறடிச் |
||
சிறு பசும் பாவையும், எம்மும், உள்ளார் |
||
கொடியர் வாழி-தோழி!-கடுவன் |
||
ஊழுறு தீம் கனி உதிர்ப்ப, கீழ் இருந்து, |
||
ஏர்ப்பனஏர்ப்பன உண்ணும் |
||
பார்ப்புடை மந்திய மலை இறந்தோரே. |
உரை | |
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் உரைத்தது. - பேரிசாத்தன் |
306. நெய்தல் |
'மெல்லிய, இனிய, மேவரு தகுந, |
||
இவை மொழியாம்' எனச் சொல்லினும், அவை நீ, |
||
மறத்தியோ வாழி-என் நெஞ்சே!-பல உடன் |
||
காமர் மாஅத்துத் தாது அமர் பூவின் |
||
வண்டு வீழ்பு அயரும் கானல்- |
||
தெண் கடல் சேர்ப்பனைக் கண்ட பின்னே? |
உரை | |
காப்பு மிகுதியான், நெஞ்சு மிக்கது வாய் சோர்ந்து, கிழத்தி உரைத்தது. - அம்மூவன் |
331. பாலை |
நெடுங் கழை திரங்கிய நீர் இல் ஆர் இடை, |
||
ஆறு செல் வம்பலர் தொலைய, மாறு நின்று, |
||
கொடுஞ் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும் |
||
கடுங்கண் யானைக் கானம் நீந்தி, |
||
இறப்பர்கொல் வாழி-தோழி!-நறுவடிப் |
||
பைங் கால் மாஅத்து அம் தளிர் அன்ன |
||
நல் மா மேனி பசப்ப, |
||
நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே. |
உரை | |
செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.- வாடாப் பிரமந்தன் |