முகப்பு |
சேம்பு |
76. குறிஞ்சி |
காந்தள் வேலி ஓங்கு மலை நல் நாட்டுச் |
||
செல்ப என்பவோ, கல் வரை மார்பர்- |
||
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை |
||
பெருங் களிற்றுச் செவியின் மானத் தைஇ, |
||
தண் வரல் வாடை தூக்கும் |
||
கடும் பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே. |
உரை | |
பிரிவுணர்த்தச் சென்ற தோழிக்கு அவர் பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது.- கிள்ளிமங்கலங்கிழார் |