முகப்பு |
முண்டகம் |
49. நெய்தல் |
அணிற் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து |
||
மணிக் கேழ் அன்ன மா நீர்ச் சேர்ப்ப! |
||
இம்மை மாறி மறுமை ஆயினும். |
||
நீ ஆகியர் எம் கணவனை; |
||
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே. |
உரை | |
தலைமகன் பரத்தைமாட்டுப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் அவனைக் கண்ட வழி அவ்வாற்றாமை நீங்குமன்றே; நீங்கியவழி, பள்ளியிடத்தானாகிய தலைமகற்குச் சொல்லியது. - அம்மூவனார் |
51. நெய்தல் |
கூன் முள் முண்டகக் கூர்ம் பனி மா மலர் |
||
நூல் அறு முத்தின் காலொடு பாறித் |
||
துறைதொறும் பரக்கும் தூ மணற் சேர்ப்பனை |
||
யானும் காதலென்; யாயும் நனி வெய்யள்; |
||
எந்தையும் கொடீஇயர்வேண்டும்; |
||
அம்பல் ஊரும் அவனொடு மொழிமே. |
உரை | |
வரைவு நீட்டித்தவிடத்து ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி வரைவு மலிவுகூறியது - குன்றியனார் |