முகப்பு |
மாணை |
36. குறிஞ்சி |
துறுகல் அயலது மாணை மாக் கொடி |
||
துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன், |
||
நெஞ்சு களன் ஆக, 'நீயலென் யான்' என, |
||
நற்றோள் மணந்த ஞான்றை, மற்று-அவன் |
||
தாவா வஞ்சினம் உரைத்தது |
||
நோயோ-தோழி!-நின் வயினானே? |
உரை | |
'வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாள்' எனக் கவன்று வேறுபட்ட தோழியைத்தலைமகள் ஆற்றுவித்தது. - பரணர் |