முகப்பு |
இருப்பை |
329. பாலை |
கான இருப்பை வேனில் வெண் பூ |
||
வளி பொரு நெடுஞ் சினை உஞற்றலின், ஆர் கழல்பு, |
||
களிறு வழங்கு சிறு நெறி புதையத் தாஅம் |
||
பிறங்குமலை அருஞ் சுரம் இறந்தவர்ப் படர்ந்து, |
||
பயில் இருள் நடுநாள் துயில் அரிது ஆகி, |
||
தெள் நீர் நிகர்மலர் புரையும் |
||
நல் மலர் மழைக்கணிற்கு எளியவால், பனியே. |
உரை | |
பிரிவிடை மெலிந்த கிழத்தி வற்புறுத்தும் தோழிக்கு, 'யான்' ஆற்றுவல்' என்பது படச் சொல்லியது. - ஓதலாந்தையார் |