முகப்பு |
கோங்கு |
254. பாலை |
இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப, |
||
முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் |
||
தலை அலர் வந்தன; வாரா-தோழி!- |
||
துயில் இன் கங்குல் துயில் அவர் மறந்தனர்; |
||
பயில் நறுங் கதுப்பின் பாயலும் உள்ளார்- |
||
'செய்பொருள் தரல் நசைஇச் சென்றோர் |
||
எய்தினரால்' என, வரூஉம் தூதே. |
உரை | |
பருவங் கண்டு வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - பார்காப்பான் |