முகப்பு |
நரந்தம் |
52. குறிஞ்சி |
ஆர் களிறு மிதித்த நீர் திகழ் சிலம்பில் |
||
சூர் நசைந்தனையையாய் நடுங்கல் கண்டே, |
||
நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல், |
||
நிரந்து இலங்கு வெண் பல், மடந்தை! |
||
பரிந்தனென் அல்லெனோ, இறைஇறை யானே? |
உரை | |
வரைவு மலிவு கேட்ட தலைமகட்குத் தோழி, முன்னாளில் தான் அறத்தொடு நின்றமை காரணத்தால் இது விளைந்தது என்பது படக் கூறியது. - பனம்பாரனார் |