முகப்பு |
பிச்சி (பித்திகம்) |
94. முல்லை |
பெருந் தண் மாரிப் பேதைப் பித்திகத்து |
||
அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே; |
||
யானே மருள்வென்?-தோழி!-பானாள் |
||
இன்னும் தமியர் கேட்பின், பெயர்த்தும் |
||
என் ஆகுவர்கொல், பிரிந்திசினோரே?- |
||
அருவி மா மலைத் தத்தக் |
||
கருவி மா மழைச் சிலைதரும் குரலே. |
உரை | |
பருவங் கண்டு ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்கு, 'ஆற்றுவல்' என்பதுபடத் தலைமகள் சொல்லியது. - கதக்கண்ணன் |
168. பாலை |
மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகை |
||
இரும் பனம் பசுங் குடை பலவுடன் பொதிந்து |
||
பெரும் பெயல் விடியல் விரித்து விட்டன்ன |
||
நறுந் தண்ணியளே, நல் மா மேனி; |
||
புனற் புணை அன்ன சாய் இறைப் பணைத் தோள் |
||
மணத்தலும் தணத்தலும் இலமே; |
||
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே. |
உரை | |
பொருள் வலிக்கும் நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது - சிறைக்குடி ஆந்தையார் |
222. குறிஞ்சி |
தலைப் புணைக் கொளினே, தலைப் புணைக் கொள்ளும்; |
||
கடைப் புணைக் கொளினே, கடைப் புணைக் கொள்ளும்; |
||
புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின், |
||
ஆண்டும் வருகுவள் போலும்-மாண்ட |
||
மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகைச் |
||
செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண் |
||
துளி தலைத் தலைஇய தளிர் அன்னோளே. |
உரை | |
பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்தது. - சிறைக்குடி ஆந்தையார் |