முகப்பு |
வேப்பம்பூ |
24. முல்லை |
கருங் கால் வேம்பின் ஒண் பூ யாணர் |
||
என்னை இன்றியும் கழிவதுகொல்லோ? |
||
ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து |
||
எழு குளிறு மிதித்த ஒரு பழம் போலக் |
||
குழைய, கொடியோர் நாவே, |
||
காதலர் அகல, கல்லென்றவ்வே. |
உரை | |
பருவங் கண்டு ஆற்றாளாகிய கிழத்தி உரைத்தது. - பரணர் |
281. பாலை |
வெண் மணற் பொதுளிய |
||
பைங் கால் கருக்கின் |
||
கொம்மைப் போந்தைக் குடுமி வெண் தோட்டு, |
||
அத்த வேம்பின் அமலை வான் பூச் |
||
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி, |
||
குன்று தலைமணந்த கானம் |
||
சென்றனர்கொல்லோ-சேயிழை!-நமரே? |
உரை | |
பிரிவிடை வேறுபட்டாளைக் கண்டு, தோழி வற்புறுப்பாட்குக் கிழத்தி உரைத்தது.- குடவாயிற் கீரத்தன் |