முகப்பு |
மா |
8. மருதம் |
கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் |
||
பழன வாளை கதூஉம் ஊரன் |
||
எம் இல் பெருமொழி கூறி, தம் இல், |
||
கையும் காலும் தூக்கத் தூக்கும் |
||
ஆடிப் பாவை போல, |
||
மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே. |
உரை | |
கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் எனக் கேட்ட காதற் பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - ஆலங்குடி வங்கனார். |
26. குறிஞ்சி |
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கை |
||
மேக்கு எழு பெருஞ் சினை இருந்த தோகை |
||
பூக் கொய் மகளிரின் தோன்றும் நாடன் |
||
தகாஅன் போலத் தான் தீது மொழியினும், |
||
தன் கண் கண்டது பொய்க்குவது அன்றே- |
||
தேக் கொக்கு அருந்தும் முள் எயிற்றுத்துவர் வாய் |
||
வரை ஆடு வன் பறழ்த் தந்தைக் |
||
கடுவனும் அறியும், அக் கொடியோனையே. |
உரை | |
நற்றாயும் செவிலித் தாயும் தலைமகளது வேறுபாடு கண்டு, 'இஃது எற்றினான்ஆயிற்று?' என்று கட்டுவிச்சியை வினவிக் கட்டுக் காண்கின்ற காலத்து,'தலைமகளது வேறுபாட்டிற்குக் காரணம் பிறிதோர் தெ |
164. மருதம் |
கணைக் கோட்டு வாளைக் கமஞ் சூல் மட நாகு |
||
துணர்த் தேக்கொக்கின் தீம் பழம் கதூஉம் |
||
தொன்று முதிர் வேளிர் குன்றூர்க் குணாது |
||
தண் பெரும் பௌவம் அணங்குக-தோழி!- |
||
மனையோள் மடமையின் புலக்கும் |
||
அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே! |
உரை | |
காதல்பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்தது. - மாங்குடிமருதன் |
201. குறிஞ்சி |
அமிழ்தம் உண்க-நம் அயல் இலாட்டி, |
||
பால் கலப்பன்ன தேக் கொக்கு அருந்துபு, |
||
நீல மென் சிறை வள் உகிர்ப் பறவை |
||
நெல்லிஅம் புளி மாந்தி, அயலது |
||
முள் இல் அம் பணை மூங்கிலில் தூங்கும் |
||
கழை நிவந்து ஓங்கிய சோலை |
||
மலை கெழு நாடனை வரும் என்றோளே! |
உரை | |
கடிநகர் புக்கு, 'வேறுபடாது நன்கு ஆற்றினாய்!' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. |
342. குறிஞ்சி |
கலை கை தொட்ட கமழ்சுளைப் பெரும் பழம் |
||
காவல் மறந்த கானவன், ஞாங்கர், |
||
கடியுடை மரம்தொறும் படு வலை மாட்டும் |
||
குன்ற நாட! தகுமோ-பைஞ் சுனைக் |
||
குவளைத் தண் தழை இவள் ஈண்டு வருந்த, |
||
நயந்தோர் புன்கண் தீர்க்கும் |
||
பயம் தலைப்படாஅப் பண்பினை எனினே? |
உரை | |
செறிப்பு அறிவுறுக்கப்பட்டான் வரைவின்கண் செல்லாது, பின்னும் வரவு வேண்டின தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லி, வரைவு கடாயது.- காவிரிப்பூம் பட்டினத்துக் கந்தரத்தனார் |