முகப்பு |
ஆடு (மறி) |
221. முல்லை |
அவரோ வாரார்-முல்லையும் பூத்தன; |
||
பறியுடைக் கையர் மறியினத்து ஒழிய, |
||
பாலொடு வந்து கூழொடு பெயரும் |
||
ஆடுடை இடைமகன் சென்னிச் |
||
சூடிய எல்லாம் சிறு பசு முகையே. |
உரை | |
பிரிவிடைப் பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது - உரையூர் முது கொற்றன் |
263. குறிஞ்சி |
மறிக் குரல் அறுத்து, தினைப் பிரப்பு இரீஇ, |
||
செல் ஆற்றுக் கவலைப் பல் இயம் கறங்க, |
||
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா |
||
வேற்றுப் பெருந் தெய்வம் பல உடன் வாழ்த்தி, |
||
'பேஎய்க் கொளீஇயள்' இவள் எனப்படுதல் |
||
நோதக்கன்றே-தோழி!-மால் வரை |
||
மழை விளையாடும் நாடனைப் |
||
பிழையேம் ஆகிய நாம் இதற்படவே. |
உரை | |
'அன்னை வெறி எடுக்கக் கருதாநின்றாள்; இனி யாம் இதற்கு என்கொலோ செயற்பாலது?'எனத் தோழி தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறமாகக் கூறியது. - பெருஞ்சாத்தன் |