முகப்பு |
எருமை |
181. குறிஞ்சி |
இது மற்று எவனோ-தோழி!-துனியிடை |
||
இன்னர் என்னும் இன்னாக் கிளவி- |
||
இரு மருப்பு எருமை ஈன்றணிக் காரான் |
||
உழவன் யாத்த குழவியின் அகலாது, |
||
பாஅல் பைம் பயிர் ஆரும் ஊரன் |
||
திரு மனைப் பல் கடம் பூண்ட |
||
பெரு முது பெண்டிரேம் ஆகிய நமக்கே? |
உரை | |
தலைமகன் பரத்தையிற் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் ஆற்றல் வேண்டித் தோழி இயற்பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது. - கிள்ளிமங்கலங்கிழார் |
279. முல்லை |
திரிமருப்பு எருமை இருள் நிற மை ஆன் |
||
வருமிடறு யாத்த பகுவாய்த் தெண் மணி, |
||
புலம்பு கொள் யாமத்து, இயங்குதொறு இசைக்கும் |
||
இது பொழுது ஆகவும் வாரார்கொல்லோ- |
||
மழை கழூஉ மறந்த மா இருந் துறுகல் |
||
துகள் சூழ் யானையின் பொலியத் தோன்றும் |
||
இரும் பல் குன்றம் போகி, |
||
திருந்து இறைப் பணைத் தோள் உள்ளாதோரே? |
உரை | |
வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - மதுரை மருதன் இளநாகனார் |