முகப்பு |
எறும்பு |
12. பாலை |
எறும்பி அளையின் குறும் பல் சுனைய |
||
உலைக்கல் அன்ன பாறை ஏறி, |
||
கொடு வில் எயினர், பகழி மாய்க்கும் |
||
கவலைத்து என்ப, அவர் தேர் சென்ற ஆறே; |
||
அது மற்று அவலம் கொள்ளாது, |
||
நொதுமல் கழறும், இவ் அழுங்கல் ஊரே. |
உரை | |
'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - ஓதலாந்தையார் |