முகப்பு |
அன்னம் |
205. நெய்தல் |
மின்னுச் செய் கருவிய பெயல் மழை தூங்க |
||
விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்தாங்கு, |
||
பொலம்படைப் பொலிந்த வெண் தேர் ஏறி, |
||
கலங்கு கடற் துவலை ஆழி நனைப்ப, |
||
இனிச் சென்றனனே, இடு மணற் சேர்ப்பன்; |
||
யாங்கு அறிந்தன்றுகொல்-தோழி!-என் |
||
தேம் கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே? |
உரை | |
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - உலோச்சன் |
300. குறிஞ்சி |
குவளை நாறும் குவை இருங் கூந்தல், |
||
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய், |
||
குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன |
||
நுண் பல் தித்தி, மாஅயோயே! |
||
நீயே, அஞ்சல்' என்ற என் சொல் அஞ்சலையே; |
||
யானே, குறுங் கால் அன்னம் குவவு மணற் சேக்கும் |
||
கடல் சூழ் மண்டிலம் பெறினும், |
||
விடல் சூழலன் யான், நின்னுடை நட்பே. |
உரை | |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சமும் வன்புறையும் கூறியது.- சிறைக்குடி ஆந்தையார் |
304. நெய்தல் |
கொல்வினைப் பொலிந்த கூர் வாய் எறிஉளி |
||
முகம் பட மடுத்த முளிவெதிர் நோன் காழ் |
||
தாங்கு அரு நீர்ச் சுரத்து எறிந்து, வாங்கு விசைக் |
||
கொடுந் திமிற் பரதவர் கோட்டு மீன் எறிய, |
||
நெடுங் கரை இருந்த குறுங் கால் அன்னத்து |
||
வெண் தோடு இரியும் வீ ததை கானல், |
||
கைதைஅம் தண் புனற் சேர்ப்பனொடு |
||
செய்தனெம்மன்ற, ஓர் பகை தரு நட்பே. |
உரை | |
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கணக்காயன் தத்தன் |