முகப்பு |
காக்கை |
210. முல்லை |
திண் தேர் நள்ளி கானத்து அண்டர் |
||
பல் ஆ பயந்த நெய்யின், தொண்டி |
||
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ் சோறு |
||
எழு கலத்து ஏந்தினும் சிறிது-என் தோழி |
||
பெருந் தோள் நெகிழ்த்த செல்லற்கு |
||
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே. |
உரை | |
பிரிந்து வந்த தலைமகன், 'நன்கு ஆற்றுவித்தாய்!' என்றாற்குத் தோழி உரைத்தது - காக்கை பாடினியார் நச்செள்ளையார். |
246. நெய்தல் |
'பெருங் கடற் கரையது சிறு வெண் காக்கை |
||
களிற்றுச் செவி அன்ன பாசடை மயக்கி, |
||
பனிக் கழி துழவும் பானாள், தனித்து ஓர் |
||
தேர் வந்து பெயர்ந்தது' என்ப. அதற்கொண்டு, |
||
ஓரும்அலைக்கும் அன்னை; பிறரும் |
||
பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர் |
||
இளையரும் மடவரும் உளரே; |
||
அலையாத் தாயரொடு நற்பாலோரே. |
உரை | |
சிறைப்புறம். - கபிலர் |
313. நெய்தல் |
பெருங் கடற் கரையது சிறுவெண் காக்கை |
||
நீத்து நீர் இருங் கழி இரை தேர்ந்து உண்டு, |
||
பூக் கமழ் பொதும்பர்ச் சேக்கும் துறைவனொடு |
||
யாத்தேம்; யாத்தன்று நட்பே; |
||
அவிழ்த்தற்கு அரிது; அது முடிந்து அமைந்தன்றே. |
உரை | |
இரவுக்குறி வந்து ஒழுகுங் காலத்துத் தலைமகனது வரவு உணர்ந்து, 'பண்பிலர்' என்று இயற்பழித்த தோழிக்கு, 'அவரோடு பிறந்த நட்பு அழியாத நட்பன்றோ!' என்று,சிறைப்புறமாகத் தலைமகள் இயற்பட |
334. நெய்தல் |
சிறு வெண் காக்கைச் செவ் வாய்ப் பெருந்தோடு |
||
எறி திரைத் திவலை ஈர்ம் புறம் நனைப்ப, |
||
பனி புலந்து உறையும் பல் பூங் கானல் |
||
இரு நீர்ச் சேர்ப்பன் நீப்பின், ஒரு நம் |
||
இன் உயிர் அல்லது, பிறிது ஒன்று |
||
எவனோ-தோழி!-நாம் இழப்பதுவே? |
உரை | |
'வரைவிடை ஆற்றகிற்றியோ?' என்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது. - இளம் பூதனார் |