முகப்பு |
குருவி |
46. மருதம் |
ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன |
||
கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ |
||
முன்றில் உணங்கல் மாந்தி, மன்றத்து |
||
எருவின் நுண் தாது குடைவன ஆடி, |
||
இல் இறைப் பள்ளித் தம் பிள்ளையொடு வதியும் |
||
புன்கண் மாலையும், புலம்பும், |
||
இன்றுகொல்-தோழி!-அவர் சென்ற நாட்டே? |
உரை | |
பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது. - மாமிலாடன். |
72. குறிஞ்சி |
பூ ஒத்து அலமரும் தகைய; ஏ ஒத்து |
||
எல்லாரும் அறிய நோய் செய்தனவே- |
||
தே மொழித் திரண்ட மென் தோள், மா மலைப் |
||
பரீஇ வித்திய ஏனல் |
||
குரீஇ ஓப்புவாள், பெரு மழைக் கண்ணே! |
உரை | |
தலைமகன் தன் வேறுபாடு கண்டு வினாவிய பாங்கற்கு உரைத்தது - மள்ளனார் |
85. மருதம் |
யாரினும் இனியன்; பேர் அன்பினனே- |
||
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல் |
||
சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர், |
||
தேம் பொதிக் கொண்ட தீம் கழைக் கரும்பின் |
||
நாறா வெண் பூ கொழுதும் |
||
யாணர் ஊரன் பாணன் வாயே. |
உரை | |
வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தோழி சொல்லி, வாயில் மறுத்தது. - வடம வண்ணக்கன் தாமோதரன் |