முகப்பு |
கெண்டை |
91. மருதம் |
அரில் பவர்ப் பிரம்பின் வரிப் புற விளை கனி |
||
குண்டு நீர் இலஞ்சிக் கெண்டை கதூஉம் |
||
தண் துறை ஊரன் பெண்டினை ஆயின், |
||
பல ஆகுக, நின் நெஞ்சில் படரே! |
||
ஓவாது ஈயும் மாரி வண் கை, |
||
கடும் பகட்டு யானை, நெடுந் தேர், அஞ்சி |
||
கொன் முனை இரவு ஊர் போலச் |
||
சில ஆகுக, நீ துஞ்சும் நாளே! |
உரை | |
பரத்தையர்மாட்டுப் பிரிந்த தலைமகன் வாயில் வேண்டிப் புக்கவழி, தன்வரை த்தன்றி அவன் வரைத்தாகித் தன் நெஞ்சு நெகிழ்ந்துழி, தலைமகள் அதனை நெருங்கிச் சொல்லியது; பரத்தையிற் பிர |
127. மருதம் |
குருகு கொளக் குளித்த கெண்டை அயலது |
||
உரு கெழு தாமரை வால் முகை வெரூஉம் |
||
கழனிஅம் படப்பை காஞ்சி ஊர! |
||
ஒரு நின் பாணன் பொய்யன் ஆக, |
||
உள்ள பாணர் எல்லாம் |
||
கள்வர் போல்வர், நீ அகன்றிசினோர்க்கே. |
உரை | |
பாணன் வாயிலாகப் புக்கவழித் தலைமகற்குத் தோழி சொல்லியது. - ஓரம்போகியார் |